• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவின் முதல் பெண் புகைப்பட பத்திரிக்கையாளரை கெளரவித்த கூகுள் டூடுல்

December 9, 2017 தண்டோரா குழு

இந்தியாவின் முதல் பெண் புகைப்பட பத்திரிக்கையாளரான ஹோமை வியாரவல்லாவின் 104வது பிறந்தாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது.

இந்திய நாட்டின் முதல் பெண் பெண் புகைப்பட பத்திரிக்கையாளர் ஹோமை வியாரவல்லா ஆவார். அவருடைய 104வது பிறந்த நாளை முன்னிட்டு இணையதளமான கூகுள் நிறுவனம் அதன் டூடுல் மூலம் அஞ்சலி செலுத்தியுள்ளது.

கடந்த 1913ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 9ம் தேதி, குஜராத் மாநிலத்திலுள்ள நவ்சாரி என்னும் இடத்தில் பிறந்த அவர், டைம்ஸ் ஆப் இந்தியாவில் பணியாற்றிய மனேக்க்ஷா ஜம்ஷெட்ஜி
வியாரவல்லா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

கடந்த 1930 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள “The Illustrated Weekly of India” என்ற பத்திரிக்கை நிறுவனத்தில், தனது பணியை தொடங்கினார்.ஆரம்பத்தில், அவரது படங்கள் அவர் கணவரின் பெயரில் வெளியிடப்பட்டன.

அதன் பிறகு, கடந்த 1942ம் ஆண்டு, தன்னுடைய குடும்பத்தினருடன் புதுதில்லிக்கு குடிபெயர்ந்தார்.
காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட பல இந்தியத் தலைவர்களின் புகைப்படங்களை எடுத்த பின்னர் தான் அவரது பணி அங்கீகரிக்கப்பட்டது.

கடந்த 2012ம் ஆண்டு, ஜனவரி மாதம் 15ம் தேதி, தனது 98வது வயதில் காலமானார்.கடந்த 2011ம் ஆண்டு, அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க