• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆர்.கே. நகரில் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது என டிடிவி தரப்பு எதிர்ப்பு

December 7, 2017 தண்டோரா குழு

அதிமுக பொதுச் செயலாளர் கையெழுத்து இல்லாததால் ஆர்.கே. நகரில் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது என டிடிவி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதிமுக சார்பில் ஆர்.கே நகர் இடைதேர்தலில் மதுசூதனன் போட்டியிடவுள்ளார். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் அதிகாரியும் ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், இன்று ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தொடங்கியது.

அப்போது, அரசியல் கட்சி வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கும் படிவத்தில் பொதுச் செயலாளர் மட்டுமே கையெழுத்திட வேண்டும். ஆனால், மதுசூதனன் தாக்கல் செய்த வேட்பு மனுவில் ‘பி’ படிவத்தில் அதிமுக பொதுச் செயலாளர் கையெழுத்து இல்லாததால்,மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது எனவும் தினகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க