• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.கே. நகரில் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது என டிடிவி தரப்பு எதிர்ப்பு

December 7, 2017 தண்டோரா குழு

அதிமுக பொதுச் செயலாளர் கையெழுத்து இல்லாததால் ஆர்.கே. நகரில் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது என டிடிவி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதிமுக சார்பில் ஆர்.கே நகர் இடைதேர்தலில் மதுசூதனன் போட்டியிடவுள்ளார். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் அதிகாரியும் ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், இன்று ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தொடங்கியது.

அப்போது, அரசியல் கட்சி வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கும் படிவத்தில் பொதுச் செயலாளர் மட்டுமே கையெழுத்திட வேண்டும். ஆனால், மதுசூதனன் தாக்கல் செய்த வேட்பு மனுவில் ‘பி’ படிவத்தில் அதிமுக பொதுச் செயலாளர் கையெழுத்து இல்லாததால்,மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது எனவும் தினகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க