• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.கே நகர் தேர்தலில் சீர் திருத்தங்கள் கொண்டு வந்தால் மட்டுமே தேர்தல் நியாயமாக நடைபெறும் – நல்லசாமி

December 7, 2017 தண்டோரா குழு

ஆர்.கே நகர் தேர்தலில் சீர் திருத்தங்கள் கொண்டு வந்தால் மட்டுமே தேர்தல் நியாயமாக நடைபெறும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

“ஆர்.கே நகர் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் சில சீர் திருத்தங்களை கொண்டு வர வேண்டும்.ஆர்.கே.நகர் தொகுதியில் தங்கள் இயக்கத்தின் சார்பாக கதிரேசன் என்பவர் போட்டியிடவுள்ளார்.ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்  நியாயமாக நடக்க வேண்டும் என்றும்,மீண்டும் தேர்தலை நிறுத்தினால் அது தமிழகத்திற்கு மிகுந்த அவமானம்.

ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் o.2% சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளை பெற்றால் அவரால் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பட்ட செலவை அந்த வேட்பாளரே செலுத்த வேண்டும் என்ற புதிய சீர் திருத்தத்தை கொண்டு வர வேண்டும்.

மேலும்,வேட்புமனு தாக்கல் செய்து பின்னர் அதனை வாபஸ் பெற்றால் முக்கிய கட்சிகளிடம்  இருந்து  பணம் பெறலாம் என்பதற்காகவே, ஆர்.கே நகரில் சுயேட்சை வேட்பாளர்கள் தற்போது அதிகரித்துள்ளனர்.இதேபோல் நடிகர் விஷால் வேட்பு மனு தாக்கல் நேரத்தில் எச்சரிக்கையாக இருந்திருந்தால்,அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருக்காது”.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க