• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

December 5, 2017 தண்டோரா குழு

சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளரை தாக்கிய வழக்கில் விஜயகாந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு விமான நிலையத்தில் பத்திரிகையாளர் பாலுவை தாக்கியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிச.5ம் தேதி விஜயகாந்த் ஆலந்தூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

இந்நிலையில், விஜயகாந்த் இன்று நேரில் ஆஜராகவில்லை.சம்மன் அனுப்பியும் இன்று விஜயகாந்த் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது.

மேலும் படிக்க