• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்காவில் டிரம்பின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

December 5, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவிற்குள் நுழைய 6 முஸ்லிம் நாடுகளுக்கு விதித்த தடைக்கு அமெரிக்க நாட்டின் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம், அமெரிக்காவின் குடியரசு தலைவராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்ற பிறகு, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் சாட், ஈரான், லிபியா, சிரியா, சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய 6 முஸ்லிம் நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் வரகூடாது என்று அதிரடியாக தடை விதித்தார். டிரம்ப் விதித்த தடைக்கு எதிர்கட்சி உள்ளிட்ட பல தரப்பினர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது.இதையடுத்து, அமெரிக்க குடியரசு தலைவர் டிரம்ப் அறிவித்த இந்த தடைக்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில்,இந்த வழக்கின் விசாரணை இன்று நடைப்பெற்றது.இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமெரிக்க குடியரசு தலைவர் டொனால்ட் டிரம்ப் விதித்த தடைக்கு அனுமதி வழங்கினார்.

மேலும் படிக்க