• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமெரிக்காவில் டிரம்பின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

December 5, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவிற்குள் நுழைய 6 முஸ்லிம் நாடுகளுக்கு விதித்த தடைக்கு அமெரிக்க நாட்டின் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம், அமெரிக்காவின் குடியரசு தலைவராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்ற பிறகு, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் சாட், ஈரான், லிபியா, சிரியா, சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய 6 முஸ்லிம் நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் வரகூடாது என்று அதிரடியாக தடை விதித்தார். டிரம்ப் விதித்த தடைக்கு எதிர்கட்சி உள்ளிட்ட பல தரப்பினர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது.இதையடுத்து, அமெரிக்க குடியரசு தலைவர் டிரம்ப் அறிவித்த இந்த தடைக்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில்,இந்த வழக்கின் விசாரணை இன்று நடைப்பெற்றது.இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமெரிக்க குடியரசு தலைவர் டொனால்ட் டிரம்ப் விதித்த தடைக்கு அனுமதி வழங்கினார்.

மேலும் படிக்க