• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐநா சபையில் ஆஸ்கர் நாயகன்

June 30, 2016 தண்டோரா குழு

மறைந்த கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி ஐ.நா சபையில் நடைபெறவுள்ளது.

அமெரிக்க தலைநகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகரிக்கப்பட்ட 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளது. இங்கு உலகில் நிகழும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு அதைச் சீர்செய்வதற்கான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இதுமட்டுமின்றி பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்படும்.

பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் இந்த ஐநா பொது சபையில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி கர்நாடக சங்கீதத்தில் புகழ்பெற்று விளங்கிய எம்.எஸ். சுப்புலட்சுமியின் 100வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது SUNSHINE இசைக்குழுவுடன் கலந்துகொண்டு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார்.

மேலும் படிக்க