• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐநா சபையில் ஆஸ்கர் நாயகன்

June 30, 2016 தண்டோரா குழு

மறைந்த கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி ஐ.நா சபையில் நடைபெறவுள்ளது.

அமெரிக்க தலைநகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகரிக்கப்பட்ட 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளது. இங்கு உலகில் நிகழும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு அதைச் சீர்செய்வதற்கான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இதுமட்டுமின்றி பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்படும்.

பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் இந்த ஐநா பொது சபையில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி கர்நாடக சங்கீதத்தில் புகழ்பெற்று விளங்கிய எம்.எஸ். சுப்புலட்சுமியின் 100வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது SUNSHINE இசைக்குழுவுடன் கலந்துகொண்டு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார்.

மேலும் படிக்க