• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கன்னியாகுமரியில் தொற்று நோய் பரவாமல் தடுக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன – விஜயபாஸ்கர்

December 2, 2017

கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் மற்றும் மழை காரணமாக தொற்று நோய் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இணை இயக்குனர் மருத்துவர் வடிவேல் தலைமையில் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.வெள்ளம் ஏற்படாத பகுதிகளிலிருந்த நடமாடும் மருத்துவ குழுக்கள் கன்னியாகுமரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும்,முதுநிலை மாணவர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் நியாயமற்றது.படிப்பை முடிக்க 9 மாதங்கள் உள்ள நிலையில், தற்போதே பணியை நியமனம் செய்யுங்கள் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது.

பல்வேறு மருத்துவமனைகளில் வெளிப்படையான கலந்தாய்வு மூலமாகவே நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மழை பாதிப்புகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறார்கள்.

கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் ரூ 282கோடி ரூபாய் செலவில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள இரண்டாம் தர அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும், 15கோடி ரூபாய் மதிப்பில் புற்றுநோய்க்கு அதிநவீன கருவிகள் மட்டுமின்றி புற்றுநோய்க்கான மண்டல மையாமாக கோவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் படிக்க