• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரகு மரணத்திற்கு பேனர் காரணமல்ல – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

December 1, 2017 தண்டோரா குழு

ரகு மரணத்திற்கு பேனர் காரணமல்ல என கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நிவாரணப்பணிகளை மேற்கொள்ள 4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அரசு மீது எந்த குற்றமும் கண்டுபிடிக்க முடியாததால் ஸ்டாலின் விரக்தியில் பேசுகிறார்.ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. டிசம்பர் 6 முதல் ஆர்.கே நகரில் பரப்புரையை தொடங்க உள்ளோம்.

மேலும்,இளைஞர் ரகு விபத்தில் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது.ரகு மரணத்திற்கு பேனர் காரணமல்ல. சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் அளித்துள்ளோம். கோவை இளைஞர் ரகு மரணம் குறித்து பொய்யான தகவலை எதிர்கட்சிகள் பரப்பி வருகின்றன”இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க