• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

WHO KILLED RAGU? என வாசகம் எழுதியது யார் போலீசார் விசாரணை

November 28, 2017 தண்டோரா குழு

கோவையில் ரகுபதி உயிரிழப்பு குறித்து சாலையில் WHO KILLED RAGU? என வாசகம் எழுதியது தொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக வைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி மென்பொறியாளர் ரகுபதி கீழே விழுந்தார். அப்போது அவர் மீது லாரி ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடரந்து லாரி டிரைவர் மோகனை கைது செய்த காவல்துறையினர் அவரை மத்திய சிறையிலடைத்தனர். இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் ஆதங்கத்தில் who killed raghu என வாசகம் எழுதப்பட்டது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இதனைத்தொடர்ந்து விபத்து நடந்த இடத்தில் who killed raghu என பெயிண்டால் எழுதியவர்கள் குறித்து பீளமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில் இரு நபர்கள் மீது காவல்துறையினர் விசாரித்தனர்.இந்த விசாரணையில் அவர்கள் இருவரும் விபத்து நடந்த ஆதங்கத்தில் எழுதியதாக தெரிவித்ததையடுத்து , வழக்கு எதுவும் போடாமல் அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க