• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ரகு மரணம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

November 27, 2017 தண்டோரா குழு

கோவை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவில் மோதி ரகுபதி என்பவர் உயிரிழந்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கோவையில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா டிசம்பர் 3ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக நகரில் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மென் பொறியாளர் ரகு என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் பேனர் மோதி உயிரிழந்தார். இதற்காக சமூக வலைத்தளங்களில் மக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, ரகு மரணம் அடைந்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை சிங்காநல்லூர் எம்.எல்.ஏ.நா.கார்த்திக் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அதில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை வழக்கு விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

மேலும் படிக்க