• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெ.வாரிசு என அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி !

November 27, 2017 தண்டோரா குழு

ஜெயலலிதா வாரிசு என அறிவிக்கக்கோரி பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்கிற அம்ருதா தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம்
தள்ளுபடி செய்தது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசு எனக்கூறி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்பவர் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்திருந்தார்.
மேலும் டி.என்.ஏ. மரபணு சோதனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகாமல், நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன்…? என கேள்வி எழுப்பினார். அதற்கு பாதுகாப்பு காரணங்களுக்காக உச்ச நீதிமன்றத்தை அணுகியதாக அம்ருதா தரப்பு பதில் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜெயலலிதாவின் வாரிசு எனக்கூறி அம்ருதா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

மேலும் படிக்க