November 25, 2017
தண்டோரா குழு
பஞ்சாபில் உள்ள பிரபல தங்க கோவிலுக்கு “World Book Of Record” நிறுவனம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களின் புனித தளமான ‘தங்க கோவில்’அமைத்துள்ளது. ‘உலகிலேயே இந்த கோவிலுக்கு அதிகம் மக்கள் வந்து சென்றதாக “World Book Of Record” நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த கோவிலை ஷிரோமணி குருத்வாரா பாபந்தக் குழு(SGPC) பராமரித்து வருகிறது. அந்த குழுவின் தலைமை செயலாளர் ரூப் சிங் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு, சுர்பி கவுல் மற்றும் கோஹ்லி ஆகியோர் இந்த விருதை வழங்கினர்.
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்கதர்கள் இந்த கோவிலுக்கு வருகின்றனர்.அதோடு பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனால்தான், இந்த விருது இந்த கோவிலுக்கு வழங்கப்பட்டதாக அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்,ஷீரடி சாய் பாபா, வைஷ்ணோ தேவி மற்றும் மௌண்ட் அபு உள்ளிட்ட எட்டு இடங்கள் இந்த விருதைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.