• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேற்குவங்கத்தில் “பத்மாவதி” திரையிடப்படும் – மம்தா பேனர்ஜி அறிவிப்பு

November 25, 2017 தண்டோரா குழு

இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சயீத் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பத்மாவதி. சித்தூர் பகுதியை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்படத்தில் வரலாற்றை திரித்து எடுக்கப்பட்டுள்ளதாக பெரிய அளவில் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது பத்மாவதி படத்தை மேற்கு வங்கம் மாநிலத்தில் திரையிட சிறப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

ஆனால், இதற்கு முன்னதாக, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள் இந்த படத்தை திரையிட அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க