• Download mobile app
29 May 2025, ThursdayEdition - 3396
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்வளர்ச்சித் துறை விருதுக்கு விண்ணபிக்க அறிவிப்பு

November 24, 2017 தண்டோரா குழு

தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பாக ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாள் விழாவில் வழங்கப்படும் பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தெருவெங்கும் பள்ளிகள் திறந்து, இலவசக் கல்வி திட்டம், சத்துணவுத் திட்டம்,முதலிய திட்டங்கள் மூலமாகத் தமிழ்ச் சமூதாயம், கல்வி எனும் கைவிளக்கு ஏந்தி முன்னேற வழிவகுத்த வரலாறு படைத்த பெருந்தகையாளர் அவர்களின் அடிச்சுவட்டில், தமிழக மக்களுக்குத் தொண்டாற்றி வரும் ஒருவருக்கு பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கப்படும்.

தமிழ்ச் சமுதாயம் முன்னேற்றம் காண அயராது பாடுபட்டு வருபவருக்கு பேரறிஞர் அண்ணா விருது வழங்கப்படும்.

தமிழில் அறிவியல் கருத்துக்களை நூலாக எழுதுபவர்களுக்கும், சமூதாய முன்னேற்றதிற்க்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும் போராடுபவர்களில் சிறந்த ஒருவருக்கு சிங்காரவேலர் விருது வழங்கப்படும்.

மேலும்,விருது பெறுபவருக்கு விருதுதொகையாக ஒரு லட்சம் ருபாய், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படும்.

இவ்விருதுக்கு தகுதியானவர்கள் அந்தந்த மாவட்டத்திலுள்ள ஆட்சியரகத்தில் தமிழ்வளர்ச்சித் துறைக்கு நேரில் வந்து விண்ணப்பங்களைப் பெற்று 2017 நவ 30ஆம் தேதிக்குள் தமிழ்வளர்ச்சி இயக்குநருக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் படிக்க