• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்படுபவர்களுக்கு சட்ட உதவி வழங்க தனி குழு – காந்திய மக்கள் இயக்கம்

November 17, 2017

கோவையில் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்படுபவர்களுக்கு சட்ட உதவி வழங்குவதற்காக தனி குழு அமைத்து செயல்பட்டு வருவதாக காந்திய மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதன் மாநில செயலாளரான டென்னிஸ் கோவில்பிள்ளை கூறுகையில்,

“அண்மையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கந்துவட்டி கொடுமையின் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்தது. இது போன்றதொரு சம்பவம் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியில் உதவி செய்யவும்,மனோ ரீதியில் ஆலோசணை வழங்கவும் வழக்கறிஞர்கள் மற்றும் மருத்துவர்கள் கொண்ட தனி குழு துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கந்துவட்டி பிரச்சிணையில் தற்போது தான் காவல்துறை அக்கறை செலுத்த துவங்கியுள்ளதாகவும் இருப்பினும் கடுமையான நடவடிக்கைகள் தேவை எனவும் வலியுறுத்தியதுடன் கந்துவட்டி பிரச்சிணையால் பாதிக்கப்படுபவர்கள் தங்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் அதற்கான அழைப்பு எண் உருவாக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க