• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உ.பியில் திருமணத்திற்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மணமகன்

November 16, 2017 தண்டோரா குழு

உ.பியில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகன் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய வினோத சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேஷ் மாநிலத்தின் ஹப்போர் நகரை சேர்ந்த ஷாருக்கானுக்கும் பிஜ்னோர் மாவட்டத்தில் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்த டான்சிம் என்னும் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

தன்னுடைய திருமண விழாவின்போது மணமகன் ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்க வேண்டும் என்று மணமகள் விரும்பினாள். தன்னுடைய விருப்பத்தை மணமகனிடம் தெரிவித்தார். மணமகனும் அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற ஒப்புக்கொண்டார். அதன்படி, திருமண விழாவிற்கு மணமகன் ஹெலிகாப்டரில் வந்திறங்கினார். அதை கண்ட மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.திருமண சடங்குகள் முடிந்த பிறகு, மணமகனும், மணமகளும் மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர்.

இது போன்ற வினோத சம்பவங்கள் மேற்கத்திய நாடுகளில் அவ்வப்போது நடைபெறுகிறது.ஆனால், அந்த மேற்கத்திய நடைமுறைகள் தற்போது, நமது நாட்டிலும் நடக்க தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க