• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சவூதியில் யோகா விளையாட்டின் ஒரு பிரிவாக அங்கீகரிப்பு

November 15, 2017 தண்டோரா குழு

சவூதியில் யோகாவை விளையாட்டின், ஒரு பிரிவாக அந்நாட்டு அரசு அங்கீகரித்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, இந்தியாவின் பல இடங்களில் யோகாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், பண்டைய இந்தியாவின் யோகா கலையை சவூதி நாட்டின் விளையாடின் ஒரு பிரிவாக செவ்வாய்க்கிழமை(நவம்பர் 14) அங்கீகரித்துள்ளது.

சவூதி அரேபியாவின் வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகம் விளையாட்டு பட்டியலில் யோகாவை சேர்த்துள்ளது. இதன் மூலம், இஸ்லாமிய ராஜ்யத்தின் மக்கள் அரசாங்கத்திடமிருந்து உரிமம் பெறுவதன் மூலம் யோகாவை நடைமுறைப்படுத்த அனுமதிக்கிறது.

கடந்த 2015ம் ஆண்டு,ஜூன் மாதம் 21ம் தேதியை, சர்வதேச யோகா தினமாக ஐ.நா அறிவிக்கப்பட்ட பின்னர், சவூதி அரேபியாவிலுள்ள இந்திய தூதரக பணிகள் மூலம், அங்குள்ள இந்திய பள்ளிகளில் யோகா அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க