• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் துடைப்பத்துடன் தூய்மை பணியில் ஈடுபட்ட தமிழக ஆளுநர்

November 15, 2017 தண்டோரா குழு

கோவை நகரப்பேருந்து நிலையத்தில் பயோ டாய்லெட், தூய்மை இந்தியா திட்டப்பணிகள் குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவைக்கு முதல் முறையாக வருகை தந்துள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை 7 மணியளவில் கோவை காந்திபுரம் பகுதியில் செயல்பாட்டில் உள்ள நவீன பொது சுகாதார மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து காந்திபுரம் மாநகர பேருந்து நிலையத்தில் தூய்மை பணிகளை பார்வையிட்ட அவர் பின்னர் தூய்மை பணியிலும் ஈடுபட்டார்.

இதையடுத்து கோவை பீளமேடு பகுதியில் சன்னிசைட் என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் கழிவு பொருட்கள் மேலாண்மை பணியை பார்வையிட்ட அவர் பின்னர் குடியிருப்பு வாசிகளுடன் கலந்துரையாடினார். இதையடுத்து அவருக்கு குடியிருப்புவாசிகள் சார்பில் பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

இந்த ஆய்வின் போது தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க