• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் திடீர் போராட்டம்

November 15, 2017 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் இன்று(நவ 15) திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி செவிலியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெற 1200 படுக்கை வசதிகள் உள்ளன.தற்போது பனியில் 300 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர்.நோயாளிகளை கவனிக்க போதிய எண்ணிக்கையில் செவிலியர்கள் இல்லாததால் பணியில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது.

இதனையடுத்து காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி செவிலியர்கள், டீன் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் டீன் அசோகன் பேச்சு வார்த்தை நடத்தினார்.கோரிக்கையை அரசுக்கு அனுப்பி வைப்பதாக அவர் உறுதி கூறியதை தொடர்ந்து செவிலியர்கள் கலைந்து பணிக்கு சென்றனர்.இந்த போராட்டத்தால் மருத்துவப் பணிகள் சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

மேலும் படிக்க