• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திகார் வரை சென்றவன் யாருக்கும் பயமில்லை – தினகரன்

November 9, 2017 தண்டோரா குழு

திகார் வரை சென்றவன் யாருக்கும் பயமில்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.சசிகலா குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடித்தி வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை டிடிவி தினகரன் சந்தித்து பேசினார்.அப்போது பேசிய அவர், ஜெயா டிவியில் என் பேட்டியை சோதனை நடைபெறும் போது போடக்கூடாது என வருமான வரித்துறை கூறியது கண்டிக்கத்தக்கது.பச்சை முத்து வீட்டில் ரெய்டு நடக்கும் போது அவரது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. என் பேட்டியை ஏன்? ஜெயா டிவியில் போடக்கூடாது? தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மத்திய அரசு எங்களை மிரட்டி பார்க்கிறது. என் மாநில செயலாளர் வீட்டில் ரெய்டு. யாருக்கும் பயமில்லை.மன்னார்குடியில் யாரும் இல்லாத வீட்டில் வருமான வரிசோதனை நடைபெறுகிறது.ஜெயா டிவியில் நடக்கும் வருமான வரி சோதனைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் காரணம்.

அடையாறில் உள்ள எனது இல்லத்தில் வருமான வரிசோதனை நடைபெறவில்லை.33 ஆண்டுகளாக சோதனைகளை சந்தித்து வருகிறோம். 20 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்தாலும் மீண்டும் வந்து அரசியலில் ஈடுபடுவேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க