• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நான் பிறந்ததற்கான காரணத்தை நிரூபிக்கும் தருணம் வந்துவிட்டது – கமலஹாசன்

November 7, 2017 தண்டோரா குழு

நான் பிறந்ததற்கான காரணத்தை நிரூபிக்கும் தருணம் வந்துவிட்டது என்று கூறிய நடிகர் கமலஹாசன் தனது பிறந்த நாளை முன்னிட்டு புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த விழாவில் பேசிய நடிகர் கமல்,

மக்கள் பிரச்னைகளை தெரிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருக்கிறேன்.தமிழகத்தை இயக்க வேண்டிய சக்கரங்கள் தற்போது பழுதடைந்துள்ளன.பிரச்னைகளுக்கு எதிரான நியாயக் குரலை வலுப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

மேலும்,கட்சியின் பெயரை அறிவிக்க இப்போது அவசியமில்லை,அவசரமில்லை.சினிமா எடுப்பதற்கே 6 மாத முன்னேற்பாடுகள் செய்பவன் நான் அரசியல் அதைவிடப் பெரிய பணி.அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும் என்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.கட்சியை தொடங்கும் முன் அடித்தளத்தைப் பலப்படுத்த வேண்டியிருக்கிறது.

அக்கிரமங்களுக்கு எதிராக தரப்படும் குரல் குறைந்துவிட்டதாகக் கருதுகிறேன்.மக்கள் பிரச்னைகளைப் பேச ’MAIAMWHISTLE’ என்ற பெயரில் புதிய #TAG அறிமுகம் செய்த கமல், #theditheerpomvaa, #virtuouscycles, #maiamwhistle என்ற பெயரில் ஹேஷ்டேக்குகளையும் அறிமுகம் செய்தார்.

நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது கனவு.தவறான ஆட்களிடம் தானத்தை கொடுப்பது கூட தவறு.நல்லது செய்வதையும் பண்பறிந்து, ஜாக்கிரதையாக செய்ய வேண்டும்.

மேலும் படிக்க