• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உறவுகளை வித்தியாசப்படுத்தி அழைக்கும் டால்பின்.

June 15, 2016 dolphin-institute.org

உயிரினங்களில் மனிதன் மட்டும் தான் தனது தாய் தந்தையர் அல்லது வாழ்க்கைத் துணை, தன் குழந்தைகள் மற்றும் நண்பர்களைப் பெயர் சொல்லி அழைக்கும் பழக்கம் உடையவர்கள் என நிலைத்தால் அது தவறு.

ஏனெனில் உயிரினங்களின் மனிதனை அடுத்து அறிவுத் திறன் உடைய உயிரினங்களில் முக்கியமானது டால்பின். இவ்வகை மீன்களிடமும் இந்தப் பழக்கம் உள்ளது என்றால் அது மிகவும் ஆச்சரியமான விஷயம் தான்.

இதில் வித்தியாசம் என்னவென்றால் மனிதர்கள் பெயர் சொல்லி அழைப்பார்கள். ஆனால் பேசும் பழக்கம் இல்லாத டால்பின்கள் தனித்துவமான விசில் சத்தங்களை இதற்குப் பயன்படுத்துகின்றன. டால்பின் கன்றுகள் தனது தாயை அழைப்பதற்கு ஒவ்வொன்றும் வித்தியாசமான விசில் சத்தங்களை உபயோகிக்கின்றன.

இதே பழக்கத்தை ஆண் டால்பின்கள் தனது ஜோடியை அழைப்பதற்கும் பயன்படுத்துகின்றன. அமெரிக்காவில் உள்ள செயின்ட் அன்ட்ரூவ்ஸ் பல்கலைக் கழகம் புளோரிடாவில் சுகாதாரப் பரிசோதனைக்காக தவணை முறையில் டால்பின்களை ஆராய்ந்தது.

அப்போது இந்த டால்பின்கள் ஒன்றையொன்று பார்க்க முடியாத போதும் ஒலியலைகளை எழுப்பிக் கேட்பதன் மூலம் தம்மை அடையாளம் கண்டுகொண்டதை கண்டுபிடித்தனர்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் புளோரிடாவின் வால்ட் டிஸ்னி வேர்ல்டில் டால்பின்களுக்கிடையே நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், ஒன்றுடன் ஒன்று நெருங்கிப்பழகிய இரு ஆண் டால்பின்களை பிரித்து தனியே அடைத்த போது அவற்றில் ஒன்று ஒலி வடிவங்களை மாற்றி மாற்றி இசைத்து மிமிக்ரி செய்தது.

இந்த ஆராய்ச்சிக்கு முன்னமேயே டால்பின்களின் உலகத்தில் அவை உடல்மொழி (Body Language) மூலம் தொடர்பு கொள்வது கண்டறியப்பட்டிருந்தது. இதைத் தவிர அவை மனிதன் பேசும் மொழியின் சொற்களஞ்சியம், வாக்கியம், கேள்விகள், தேவைகள் ஆகியவற்றையும் சிறிது புரிந்து கொள்ளக் கூடியவை என்பதும் தொலைக்காட்சியைப் பார்த்து அதில் விடப்படும் உத்தரவுகளைப் பின்பற்றும் திறமையுடையன என விலங்கியல் நிபுணர்கள் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க