• Download mobile app
30 Jul 2026, ThursdayEdition - 3823
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நொய்யல் ஆற்றில் நுரையுடன் ஓடிய தண்ணீர் ; மக்கள் அதிர்ச்சி

September 20, 2017 தண்டோரா குழு

திருப்பூர் நொய்யல் ஆற்றில் கரை புரண்டோடிய வெள்ளத்தில் சாய கழிவு நீர் கலந்து நுரையுடன் ஓடியது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பின்னலாடை துறையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சிறந்து விளங்கி வரும் நிலையில் ஆண்டொன்றிற்கு சுமார் 24 ஆயிரம் கோடி அளவிற்கு அன்னிய செலாவனியை ஈட்டி தரும் நகரமாக திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு நொய்யல் ஆற்றில் சாய கழிவு நீர் கலப்பதால் விவசாயம் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்பட்டதை அடுத்து விவசாயிகள் தொடந்த வழக்கில் அதிரடியாக சுத்தகரிக்கப்படாத கழிவு நீரை ஆற்றில் கலந்துவிடும் சாய ஆலைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே நவீன பொது சுத்தகரிப்பு நிலையங்களில் ஜீரோ டிஸ்சார்ஜ் முறையை பின்பற்றவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை காரணமாக 18 பொது சுத்தகதிப்பு நிலையங்களுக்கு வட்டியில்லா கடனாக ரூபாய் 200 கோடி வரை வழங்கி மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனிடையே கடந்த சில நாட்களாக திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வரும் நிலையில் ஆற்று நீருடன் சாய கழிவு நீர் கலப்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதலிபாளையம் பகுதியில் சாய கழிவ நீர் ஆற்றில் கலந்ததால் 23 சாய ஆலைகளுக்கு சீல் வைத்து மாசுகட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில் நடராஜா தியேட்டர் அருகே நொய்யல் ஆற்றில் கரைபுரண்டோடிய வெள்ளத்தில் சாய கழிவு நீர் கலந்து நுரையுடன் ஓடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் அலட்சிய போக்கினை கைவிட்டு முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறினார்.

மேலும் படிக்க