• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் யானை தாக்கி முதியவர் பலி

September 8, 2017 தண்டோரா குழு

கோவை தடாகம் அருகே காட்டு யானை தாக்கி முதியவர் பலியானார்.

கோவை ஆனைகட்டி சாலையில் கணுவாய் அடுத்துள்ள டி.எஸ்.பி பஸ் நிறுத்தம் பகுதியில் இன்று அதிகாலை அந்த வழியாக தடாகத்தை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ராதாகிருஷ்ணன் என்பவர் செங்கள் சூளைக்கு வேலைக்கு செல்வதற்காக வந்த போது அவ்வழியாக வந்த ஒற்றை காட்டு யானை ராதாகிருஷ்ணனை தாக்கி விட்டு சென்றுவிட்டது.

இதில் சம்பவ இடத்திலேயே முதியவர் ராதாகிருஷ்ணன் பரிதாபமாக பலியானார். அவ்வழியாக வந்த பொதுமக்கள் கோவை வனத்துறையினர் மற்றும் துடியலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ராதாகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக துடியலூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்

மேலும் படிக்க