• Download mobile app
18 Jan 2026, SundayEdition - 3630
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகுபலிக்கு சவால் விடும் சுந்தர் சி

June 4, 2016 தண்டோரா குழு

மெகா பட்ஜெட்டில் சரித்திரப்படம் எடுக்க இயக்குநர் சுந்தர்.சி. திட்டமிட்டுள்ளார்.

சரித்திரகாலத்தை பின்னணியாகக் கொண்டு 250 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் இந்தப் படத்துக்கு தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஹீரோவைப் புக் செய்ய திட்டமிடப் பட்டுள்ளது.

இதற்காக சூர்யா மற்றும் மகேஷ் பாபுவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல, ஒளிப்பதிவாளர் திரு, கலை இயக்குநர் சாபு சிரில் மற்றும் பாகுபலி படத்துக்கு கிராபிக்ஸ் வேலைகளை மேற்கொண்ட கமலக் கண்ணன் ஆகியோர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமாக இது அமையும் என்பதால், மிகப்பிரமாண்டமாகத் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுந்தர்.சி இயக்கும் இந்தப் படம் பாகுபலி, மகதீரா படங்களுக்குச் சவால் விடும் வகையில் அமையும் என்று கோலிவுட் வட்டாரம் இப்போதே கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளன.

இந்தப்படத்திலயும் உங்க வழக்கமான நகைச்சுவை உணர்வு அதிகமா இருக்குமா சுந்தர்ஜி………….

மேலும் படிக்க