• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காட்டில் விடப்பட்ட 7வயது சிறுவன் உயிருடன் மீட்பு

June 4, 2016 தண்டோரா குழு

ஜப்பானில் குறும்பு செய்ததற்காகப் பெற்றோரால் அடர்ந்த காட்டில் தனித்து விடப்பட்ட 7 வயது சிறுவன் ஒரு வாரத்துக்குப் பிறகு ராணுவத்தினரால் உயிருடன் மீட்கப்பட்டார்.

குழந்தைகள் குறும்பு செய்தால் பெற்றோர்கள் கண்டிப்பது வழக்கம். ஆனால், ஜப்பான் நாட்டில் குழந்தை குறும்பு செய்தார் என்பதற்காக அவனது பெற்றோர் அவனைத் தனிமையாக காட்டில் விட்டுள்ளனர்.

ஜப்பானின் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் 7 வயது சிறுவன் யமாட்டோ டநாகா. அவர் வீட்டில் அதிக அளவில் குறும்பு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் அவனது பெற்றோர் அவனை அடர்ந்த காட்டில் தனியாக விட்டு விட்டு வந்துவிட்டனர். எப்படியும் சிறிது நேரத்தில் டநாகாவைக் கண்டுபிடித்து விடலாம் என்று பெற்றோர்கள் நினைத்தனர் ஆனால் அது நடக்காமல் போனது.

இதையடுத்து போலீசில் பெற்றோர் புகார் அளிக்க, ராணுவத்தின் உதவியுடன் அந்த கரடிகள் நிறைந்த அடர்ந்த வனப் பகுதியில் 7 நாட்களுக்காகச் சிறுவனை தேடிவந்தனர். இந்த நிலையில், அந்த வனப்பகுதியில் உள்ள ராணுவ மையத்துக்கு அருகில் ஒரு இடத்தில் அந்தச் சிறுவனை கண்டுபிடித்தனர் மீட்புக் குழுவினர். கடும் குளிரும், கன மழையும் பொழியும் அந்த அடர்ந்த வனப் பகுதியில் 7 நாட்கள் சிறுவன் தாக்குப்பிடித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் யமாட்டோ டநாகா.

மேலும், எனது மகனைக் காப்பாற்றியதற்காக மீட்பு குழுவினருக்கு நன்றி தெரிவித்த சிறுவனின் தந்தை, நடந்த தவற்றுக்காக எல்லோரிடமும் மன்னிப்பு கேட்துக்கொண்டார்.

இதில் மேலும் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வு என்ன வென்றால் அந்தச் சிறுவனை கண்டுபிடித்த ராணுவத்தினர் அவனைப் பெற்றோரிடம் காண்பிக்கும்போது முதன்முதலில் அவன் அம்மா பசிக்கிறது எனக் கேட்டுள்ளான். இதையடுத்து அங்கு நின்றிருந்தவர்கள் அனைவரும் கண்கலங்கியுள்ளனர்.

அப்படி இருக்கும் பொது பெற்றவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்பது தற்போது நெகிழ்ச்சியான விசயமாகப் பேசப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க