• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சசிகலாவை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு

July 21, 2017 தண்டோரா குழு

பெங்களூரு சிறையில் உள்ள அதிமுக பொதுச்செயலார் சசிகலாவை சந்திக்க அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“சிறையில் அதிகாரிகள் என்னை காக்க வைத்து பின்னர் சசிகலாவை சந்திக்க அனுமதி மறுத்தனர்,” என்றார்.

கடந்த சில நாட்களாகவே பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா சகல வசதிகளுடன் வாழ்ந்து வருகிறார் அதற்கு சிறைத் துறை அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் வரை லஞ்சம் வழங்கப்பட்டது என முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா புகார் தெரிவித்திருந்தார்.

இதனிடையே சசிகலா வண்ண உடைகளில் வலம் வருவது போன்ற வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற காரணங்களினால் தான் சசிகலாவை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க