• Download mobile app
07 Sep 2025, SundayEdition - 3497
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் மாயாவதி

July 18, 2017 தண்டோரா குழு

தலித் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேச இடையூறு செய்வதால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ராஜினாமா செய்துள்ளார்.

மாநிலங்களவை கூட்டம் இன்று ‌கூடியதும், உத்தரப் பிரதேசத்தில் அப்போது தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் குறித்துபகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிகேள்வி எழுப்பி‌னார். அவர் பேசுவதற்கு 3 நிமிடங்‌கள் மட்டுமே‌ அனும‌தி அளிக்கப்பட்டது.

இதனால் கடும் அதிருப்தி அடைந்தமாயாவதி ஆவேசமாகப் பேசினார். இதனால் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி அவர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தலித் மற்றும் பழங்குடியினர் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகத்தான் நாடாளுமன்றத்துக்கு வருகிறேன். ஆனால் இங்கு அவர்களின் பிரச்னையை என்ளனால்‌ பேச‌ மு‌டியவில்லை. அவ்வாறு இருக்கும்போது‌ எதற்காக நான் நாடாளுமன்றத்துக்கு வர வேண்டும். ‌‌

ஆகையால் எனது பதவியை ராஜினாமா செய்‌ய முடிவு எடுத்துள்ளேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் தலித்துகள் பிரச்னையை பேச அனுமதி மறுக்கப்படுவதாக கூறிமாயாவதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பான கடிதத்தை துணை குடியசுத் தலைவர் அமித் அன்சாரிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் படிக்க