• Download mobile app
30 Aug 2026, SundayEdition - 3854
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

73 வயது மூதாட்டியை மணந்த 15 வயது சிறுவன்!

July 7, 2017 தண்டோரா குழு

இந்தோனேசியாவில் 15 வயது சிறுவன் 73 வயது மூதாட்டியை திருமணம் செய்துக்கொண்ட சம்பவம்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் காராங் என்டா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் செலாமெட் ரியாடி (15) மலேரியா காய்ச்சலில் அவதிப்பட்ட போது அவன் வீட்டின் அருகில் வசிக்கும் 73 வயதான மூதாட்டி ரொகாயா பின்டி கியாகஸ் முகமது ஜாக்பார் அவனை நல்ல முறையில் கவனித்துக்கொண்டார்.

இதனால், அந்த மூதாட்டி மீது அதிக அன்புக் கொண்டிருந்தான் அந்த சிறுவன்.இந்த அன்பு நாளடைவில் காதலாக மாறியது.இதனால் அந்த மூதாட்டியை திருமணம் செய்துக்கொள்ள விரும்பினான்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களிடம் தங்களுடைய திருமணத்தை நிறுத்தினால், இருவரும் தற்கொலை செய்துக்கொள்வோம் என்று மிரட்டியுள்ளனர். இதையடுத்து, அவர்களுடைய திருமணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கரங் எந்தா என்னும் இடத்தில் நடந்ததுள்ளது.

இது குறித்து அந்த கிராமத்தின் தலைவர் சிக் அனி கூறுகையில்,

“ரியாடியின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த போது, இருவரும் தற்கொலை செய்துகொள்வாம் என்று மிரட்டியதால், அவர்களுடைய திருமணத்தை நடத்தினோம். அந்த சிறுவனுடைய தந்தை இறந்த பிறகு, அவனுடைய தாய் மறுமணம் செய்துக்கொண்டார். அவனை கவனிக்க யாருமில்லை. ரோஹாயா இதற்கு முன் இரண்டு திருமணங்கள் நடந்துள்ளது. அவருக்கு ஒரு மகன் கூட இருக்கிறான். ஒருவரையொருவர் அதிகமாக நேசிப்பதாக இருவரும் தெரிவித்துள்ளனர்” என்று கூறினார்.

மேலும் படிக்க