• Download mobile app
29 Oct 2025, WednesdayEdition - 3549
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செய்தியாளர்கள் கேட்ட கேள்வியால் கதறி அழுத வீனஸ் வில்லியம்ஸ்!

July 5, 2017 tamilsamayam.com

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க லண்டன் வந்துள்ள டென்னிஸ் நட்சத்திரம் வீனஸ் வில்லியம்ஸ், செய்தியாளர்களின் கேள்வியால் கதறி அழ ஆரம்பித்தார்.

விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கான செய்தியாளர் சந்திப்பில், வீனஸ் வில்லியம் கலந்து கொண்டு அவர்களின் கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு செய்தியாளர் உங்கள் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரு முதியவர் உயிரிழந்தது குறித்து கேள்வி கேட்டார்.

அதற்கு பதிலளித்த வீனஸ் வில்லியம், அதில் என் தவறு ஒன்றும் இல்லை என கூறியதோடு, சிறிது நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டு அழ ஆரம்பித்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.

வீனஸ் வில்லியம்ஸ், கடந்த 9ம் தேதி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதிய விபத்தில், அந்த காரில் பயணம் செய்த ஒரு முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் வீனஸ் வில்லியம்ஸ் விதிமுறை மீறி காரை இயக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் படிக்க