• Download mobile app
29 Oct 2025, WednesdayEdition - 3549
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜிஎஸ்டியால் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சிலிண்டர் விலை உயர்வு

July 4, 2017 தண்டோரா குழு

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரியால் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே வரியான ஜி.எஸ்.டி வரி விதிப்பு கடந்த 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. 5% ஜி.எஸ்.டி. வரிவிதிக்கப்பட்டதை அடுத்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. இதனால் டெல்லியில்14.2 கிலோ எடை கொண்ட மானிய விலை சிலிண்டரின் விலை 446.65 ல் இருந்து 477.46 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மானிய விலையில் கிடைக்கும் சிலிண்டரின் விலை ரூ. 465.56 ஆக இருக்கும் என்று எண்ணைய் நிறுவன வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஒரே நேரத்தில் 32 ரூபாய் உயர்வது 6 ஆண்டுகளில் இதுவே முதல்முறை ஆகும்.கடந்த 2011 ஆம் ஆண்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை உயர்வு காரணமாக சிலிண்டர் ஒன்றின் விலை ரூ. 50 வரை உயர்ந்தது. இதன்பிறகு தற்போதுதான் இந்த அளவுக்கு கடுமையாக மானிய விலை சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க