• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாடு விற்பனை விவகாரம் இடைக்கால தடை மேலும் நான்கு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

June 28, 2017 தண்டோரா குழு

இறைச்சிக்காக மாடு விற்பனை விவகாரத்தில் இடைக்கால தடை மேலும் 4 வாரத்திற்கு நீட்டிப்பு

இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு உத்திரவிட்டது. இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து கடந்த மே 30ம் தேதி மாடு விற்பனை தொடர்பாக மத்தியஅரசு விதித்த கட்டுப்பாடுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை 4 வாரத்திற்கு தடை விதித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாடு விற்பனை விவகாரத்தில் இடைக்கால தடை மேலும் 4 வாரத்திற்கு நீட்டித்து நீதிமன்றம் உத்திரவிட்டது.

மேலும், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை அவகாசம் அளித்துள்ளது.

மேலும் படிக்க