• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தி இல்லாமல் நாட்டின் முன்னேற்றம் இல்லை – வெங்கய்ய நாயுடு

June 24, 2017 தண்டோரா குழு

இந்தி இல்லாமல் நாட்டின் வளர்ச்சியே இல்லை என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.

சபர்மதி் ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர்,

இந்தி மொழி இந்தியர்களின் அடையாளம். இந்தி தான் தாய்மொழி. நமது தாய்மொழியை கற்றுக் கொள்வதுடன் அதனை மேம்படுத்தவும் வேண்டும். இதற்காக நாம் பெருமைப்படவேண்டும்.

நான் ஆங்கிலேயர்களுக்கு எதிரானவன் தான் அவர்களது மொழிக்கு எதிரானவன் இல்லை. அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும்.

நாம் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளும்போது, நம்மை ஆங்கிலேய மக்கள் போல நினைத்துக் கொள்கிறோம். இது நாட்டின் நலனுக்கு நல்லது அல்ல. இந்தி நமது தேசிய மொழி. அது இல்லாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமே இல்லை என்றார்.

மேலும், வேலைவாய்ப்புக்காக ஒவ்வொருவரும் ஆங்கிலம் கற்றுக் கொள்ளவேண்டும் என எண்ணுவது துரதிர்ஷ்டவசமானது. அதே நேரம் இந்தியை கற்றுக் கொள்ளவேண்டும். இதுபற்றி தேசிய அளவில் விவாதம் வேண்டும் என நான் விரும்புகிறேன் என்றார்.

மேலும் படிக்க