• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக மீனவர்கள் 8 பேர் கைது

June 24, 2017 தண்டோரா குழு

தமிழக மீனவர்கள் 8 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாகை மாவட்ட மீனவர்கள் 8 பேர் கடந்த 20-ம் தேதி ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இந்திய எல்லையை தாண்டி சென்று மீன் பிடித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து இலங்கை காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் படிக்க