• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தம்பிதுரையின் பேச்சுக்கள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது – அ.தி.மு.க எம்பிக்கள்

June 24, 2017 தண்டோரா குழு

குடியரசுத் தலைவர் தேர்தல் ஆதரவு தொடர்பாக தம்பிதுரையின் பேச்சுக்கள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என அ.தி.மு.க எம்பிக்கள் அருண்மொழிதேவன் மற்றும் கோ.அரி கூறியுள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர்கள் கூறுகையில்

“குடியரசுத் தலைவர் தேர்தல் ஆதரவு தொடர்பாக மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை கூறிய கருத்தால் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதிமுக என்பது ஒரு ராணுவ கட்டுபாடு கொண்ட இயக்கம், ராணுவ கட்டுப்பாட்டோடு நடத்தப்பட வேண்டும். சசிகலாவின் குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என முதலில் கூறியவர் தம்பிதுரை. தற்போது அவரது சொந்த கருத்துக்கள் முதல்வருக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

சசிகலா அறிவுரைப்படி ஆதரவு என தம்பிதுரை கூறியது தவறானது. தம்பிதுரையின் பேச்சுக்கள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.” என்றனர் அவர்கள்.

மேலும் படிக்க