• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாஜக குடியரசுத்தலைவர் வேட்பாளருக்கு எடப்பாடி பழனிசாமியிடம் ஆதரவு கோரினார்பிரதமர் மோடி

June 19, 2017 தண்டோரா குழு

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பிரதமர் மோடி ஆதரவு கேட்டுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான பாஜக ஆட்சிமன்றகுழு கூட்டம் இன்று கூடியது. இக்கூட்டத்தில் தே.ஜ. கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.

அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரிடம் பிரதமர் மோடி ஆதரவு கோரியுள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் பீகார் மாநில ஆளுநராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க