• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை இல்லை – அமைச்சர் காமராஜ்

June 8, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை இல்லை, பிளாஸ்டிக் அரிசி விற்பனை குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் பகுதியில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாகவும் அந்த அரிசியை சிறுவர்கள் உருண்டை பிடித்து பந்து போல் வீசி விளையாடுவதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகின்றது.

இதனை அடுத்து நாடு முழுவதும் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. தமிழகத்திலும் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யபடுவதாக தகவல் வெளியானது. இதனை தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மறுத்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் காமராஜ் கூறுகையில்,

” தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படவில்லை. ரேஷன் கடையில் மலிவு விலையில் அரிசி விற்பனை செய்யப்படுவதால் கலப்படம் செய்ய வாய்ப்பில்லை. பிளாஸ்டிக் அரிசி விற்பனை குறித்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை. அவ்வாறு புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

மேலும் படிக்க