• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை இல்லை – அமைச்சர் காமராஜ்

June 8, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை இல்லை, பிளாஸ்டிக் அரிசி விற்பனை குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் பகுதியில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாகவும் அந்த அரிசியை சிறுவர்கள் உருண்டை பிடித்து பந்து போல் வீசி விளையாடுவதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகின்றது.

இதனை அடுத்து நாடு முழுவதும் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. தமிழகத்திலும் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யபடுவதாக தகவல் வெளியானது. இதனை தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மறுத்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் காமராஜ் கூறுகையில்,

” தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படவில்லை. ரேஷன் கடையில் மலிவு விலையில் அரிசி விற்பனை செய்யப்படுவதால் கலப்படம் செய்ய வாய்ப்பில்லை. பிளாஸ்டிக் அரிசி விற்பனை குறித்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை. அவ்வாறு புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

மேலும் படிக்க