• Download mobile app
06 May 2025, TuesdayEdition - 3373
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உ.பியில் காவல்துறை அதிகாரியை கன்னத்தில் அறைந்த பா.ஜ.க எம்.எல்.ஏ

June 7, 2017 தண்டோரா குழு

உத்தரபிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ ஒருவர், போக்குவரத்து போலீசாரை அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேஷ் மாநிலத்தில் பா.ஜ.க எம்எல்ஏ ஸ்ரீராம் சோன்கர் செவ்வாய்க்கிழமை(ஜூன் 6) தனது காரில் சென்றுள்ளார். அவர் சென்ற சாலை ஒரு வழி பாதையாகும். சாலை விதிமுறைகளை மீறியதால், அவருடைய வாகனத்தை போக்குவரத்து அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். கோபம் அடைந்த அமைச்சர் காவல் துறை அதிகாரி பாபு பவான் என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு அவரை கன்னத்தில் அறைந்துள்ளார்.

போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரேம் ஷங்கர் சாஹி இதை தடுத்து நிறுத்த முயன்றார். அவரையும் எம்எல்ஏ மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர்.

“நோ என்ட்ரி போர்டு இருந்தால், யாருக்கு என்ன கவலை, அபராதம் கட்ட சொன்னால் அதை கொடுத்து விடுகிறோம்” என்று பா.ஜ,க எம்எல்ஏ ஸ்ரீ ராம் சோனகார் கூறியுள்ளார். மேலும், இந்த சம்பவத்திற்கு மன்னிப்பும் கேட்க மறுத்துவிட்டார்.

“ஸ்ரீ ராம் சோனகார் எப்பொழுதும் இந்த சாலையை தான் பயன்படுத்துகிறார். சாலை விதிமுறைகளை மீறுவது தட்டி கேட்டால், அடிக்கிறார்” என்று மூத்த அதிகாரி தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரபிரதேஷ் ஐஜி ஜே.என்.சிங் உத்தரவிட்டுள்ளார்…

மேலும் படிக்க