• Download mobile app
23 Feb 2026, MondayEdition - 3666
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூன்றரை வயதில் இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த குட்டி தமிழச்சி

June 3, 2017 tamilsamayam.com

மூன்றரை வயதே ஆன சேலத்தை சேர்ந்த நேத்ரா என்ற சிறுமி சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் இரண்டு தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

சேலம், அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் நேத்ரா. துறு துறு என இருக்கும் நேத்ரா எப்போதும் கால்களில் ரெக்கை கட்டி பறந்து கொண்டு தான் இருப்பார். ஆம் ஸ்கேட்டிங் எனும் ரெக்கையை கட்டி பறப்பது நேத்ராவுக்கு மிகவும் பிடிக்கும்.

வெறும் மூனறை வயதாக இருந்தாலும், அவர் ஸ்கேட்டிங்கில் செய்யும் அட்டகாசம் மிகவும் அதிகம் தான். இவர் உள்ளூரில் நடந்த பல போட்டிகளில் கலக்கியிருந்தார்.

தற்போது தாய்லாந்தில் 6 வயதுக்குட்பட்டோருக்கான ஸ்கேட்டிங் போட்டி நடைப்பெற்று வருகின்றது. இதில் கலந்து கொண்ட நேத்ரா 500 மீட்டர் மற்றும் 1000 மீட்டர் பிரிவுகளில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

மேலும் படிக்க