• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் – ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அறிவுரை

May 31, 2017 தண்டோரா குழு

பசுவை கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் எனவும் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் எனவும்ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

சந்தைகளில் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக் கூடாது என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவகாரம் தற்போது நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

மத்திய அரசுக்கு எதிராக பல இடங்களிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றன. கேரளா, கர்நாடக, மேற்கு வங்கம் என பல மாநில அரசுகளும் இந்த விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மாட்டிறைச்சி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில்
“ பசுவை கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும். பசுவை கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் ராஜஸ்தான் அரசு சட்டம் இயற்ற வேண்டும். பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்” என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க