• Download mobile app
16 Jan 2026, FridayEdition - 3628
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாட்டிறைச்சி திருவிழாவிற்கு ஏற்பாடு செய்த ஐஐடி மாணவர் மீது தாக்குதல்

May 30, 2017 தண்டோரா குழு

சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி உண்ணும் திருவிழா நடத்த ஏற்பாடு செய்த மாணவர் சூரஜ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கடந்த ஞாயிறன்று சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டுக்கறி திருவிழா நடைபெற்றது. இதனை அம்பேத்கர் ஆய்வு மையத்தை சேர்ந்த மாணவர் சூரஜ் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,மாணவர் சூரஜை ஐஐடியில் பயிலும் மற்றொரு தரப்பு மாணவர்கள் தாக்கியுள்ளனர். மாணவர்கள் தாக்கியத்தில் காயமடைந்த சூரஜ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து சூரஜ் தாக்கப்பட்டது தொடர்பாக ஐஐடி டீனிடம் மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க