• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இணையதளத்தை கலக்கும் 97 வயது மூதாட்டி

May 27, 2017 தண்டோரா குழு

வியட்நாம் நாட்டில் 97 வயது மூதாட்டி ஒருவர் கணினியை மிகவும் எளிதாக கையாண்டு இணையதளம் மூலம் சமூக வலைதளங்களில் கலக்கி வருகிறார்.

வியட்நாம் நாட்டின் தலைநகரான ஹனோய் நகரில் லீ தீ என்னும் 97 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இந்த வயதிலும் அவர் புத்தகம் எழுதுவது, ஓவியம் வரைவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.எல்லாவற்றிற்கும் மேலாக அவர் கணினியை மிக எளிதாக கையாளுகிறார்.

இணையதளம் மூலம் சமூக வலைதளங்களில் கலக்கி வருகிறார். வெளியூரில் உள்ள தனது உறவினர்களிடம் வீடியோ கால் பேசிவருகிறார்.இதற்கு காரணம் அவருடைய கற்றுக்கொள்ளும் பேரார்வம் தான்.

தன்னுடைய பேரனுடன் ஸ்கைப் மூலம் பேசுவது மற்றும் தனது 87 வயதில் தான் எழுதிய புத்தகம் குறித்து இணையதளத்தில் விவாதித்துமாக பொழுதை கழித்து வருகிறார்.

தளராத வயதிலும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் ஆர்வத்தால், இணையதளத்தை பயன்படுத்த கற்றுக்கொண்டார் லீ தீ. இணையதளத்தின் கூகுள் மற்றும் யாஹூ ஆகிய தளங்களிலிருந்து செய்திகளை அறிந்து வருகிறார்.

கடந்த 2௦௦7-ம் ஆண்டு, தன்னுடைய ‘Upstream’ என்னும் சுயசரிதையை எழுதிகொண்டிருந்தார். ஆனால், அவரால் காகிதத்தையும் பேனாவையும் கொண்டு எழுத முடியவில்லை.

இதை அறிந்த அவருடைய பேர பிள்ளைகள், அவருக்கு மடிக்கணினி ஒன்றை வாங்கி தந்தனர். அதை பயன்படுத்தி தன்னுடைய சுயசரித்தையை எழுதி முடித்தார். கடந்த 2௦1௦-ம் ஆண்டு அதை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

“எனக்கு தற்போது 97 வயது என்றாலும், என்னுடைய ஆன்மாவிற்கு வயது 2௦” என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க