• Download mobile app
17 Jul 2026, FridayEdition - 3810
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்களின் பிடிவாரண்டுக்கு இடைக்கால தடை

May 25, 2017 தண்டோரா குழு

சூர்யா உள்ளிட்ட 8 பேர் மீதான பிடிவாரண்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த, 2009ம் ஆண்டு நடந்த, நடிகர்கள் சங்கக் கூட்டத்தில், பத்திரிகையாளர்களின் சமூக தகுதியை குறைக்கும் வகையிலும், மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக, உதகையை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் உதகை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கில் நடிகர் சூர்யா, சரத்குமார், சத்யராஜ், ஸ்ரீபிரியா, விவேக், விஜயகுமார், இயக்குனர் சேரன், அருண் விஜய் ஆகியோர் விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காரணத்தால் அவரகளுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உதகை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து, நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க பிடிவாரண்டுக்கு எதிரான 8 நடிகர்களும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இம்மனுவை இன்று விசாரித்த நீதிபதி 8 நடிகர்கள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.மேலும், ஜூன் 17ஆம் தேதிக்குள் 8 நடிகர்களும் ஆஜராக உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

மேலும் படிக்க