• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வு ரத்து ; உச்சநீதிமன்றம் மறுப்பு

May 25, 2017 தண்டோரா குழு

நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பான அவசர வழக்கை உடனே விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் நீட் தேர்வு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையில் முடிந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தது.

நீட் தேர்வில் ஒரே மாதிரியான வினாத்தாள் கேட்கப்படவில்லை என திருச்சியை சேர்ந்த சக்தி மலர்க்கொடி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தனர்.

இந்நிலையில் நீட் தேர்வில் பல்வேறு குளறபடி நடந்துள்ளதால் அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் இதனை அவரச வழக்காக எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடுக்கப்பட்டது.

இதனிடையே “நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பான வழக்கை உடனே விசாரிக்க முடியாது . தேர்வு முடிவை வெளியிட ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவசர வழக்கு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் படிக்க