• Download mobile app
15 Dec 2025, MondayEdition - 3596
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஈரோடு ரயில்நிலையத்தில் திடீர் பயணச்சீட்டு பரிசோதனை நடைபெற்றது.

May 20, 2017 தண்டோரா குழு

ஈரோடு ரயில்நிலையத்தில் தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் வணிகவியல் பிரிவு அதிகாரிகளால் இரவு நேர திடீர் பயணச்சீட்டு பரிசோதனை நடைபெற்றது.

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் வணிகவியில் மற்றும் இரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் கொண்ட குழுவினர் ஈரோடு ரயில்நிலையத்தில் நேற்று இரவு 8 மணி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை திடீர் பயணச்சீட்டு பரிசோதனை மேற்கொண்டனர்.

சேலம் தலைமை பயணச்சீட்டு பரிசோதகர் எம். ராஜேஸ்வரன் தலைமையிலான 16 பேர் கொண்ட வணிகவியல் குழு மற்றும்சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை துணை ஆணையர் சிவதாஸ் தலைமையிலான 15 ரயில்வே பாதுகாப்புப் படையினர் குழு மேற்கொண்ட இந்த திடீர் சோதனையில் 61 பேர் தகுந்த பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் 21,050 ரூபாய் பயணச்சீட்டு தொகை அபராதமாக வசூலிக்கப்பட்டது.

இந்த பரிசோதனை குறித்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா, சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜுவையும் வணிகவியல் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினரையும் பாராட்டினார்.

மேலும்,இது போன்ற சோதனைகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு அவர்களுக்கு ஹரிசங்கர் வர்மா அறிவுறுத்தினார். ரயில் பயணிகளையும் தகுந்த பயணச்சீட்டு பெற்று பயணம் செய்து ரயில்வேக்கு ஒத்துழைக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க