• Download mobile app
16 Jan 2026, FridayEdition - 3628
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேர்தல் தேதிக்காகவும் லஞ்சம் கொடுக்க முயன்றாராதினகரன் ?

May 20, 2017 தண்டோரா குழு

ஆர்.கே.நகர் மறுதேர்தல் தேதிக்காகவும் தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி காவல்துறையினர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று தில்லி கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

நீதிமன்றத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட பிறகு மறுதேர்தல் குறித்து தினகரனும், சுகேஷ் சந்திரசேகரும் பேசிய ஆடியோ பதிவு தங்களிடம் உள்ளதாக தில்லி காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

மேலும் ஆர்.கே.நகர் மறுதேர்தல் தேதி 5 என்ற எண்ணில் வருமாறு ஏற்பாடு செய்யும் படி தினகரன் சுகேஷ் சந்திரசேரிடம் பேசிய ஆடியோ பதிவும் உள்ளதாக காவல்துறையினர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க