• Download mobile app
16 Jan 2026, FridayEdition - 3628
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உத்தரகாண்ட் நிலச்சரிவு பக்தர்கள் மீட்பு

May 20, 2017 தண்டோரா குழு

உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் கோவிலுக்கு புனித யாத்திரை செல்லும் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட அனைவரும் மீட்கப்பட்டு விட்டதாக முதலமைச்சர் திரிவேந்திரசிங் ராவத் தெரிவித்துள்ளார்.

பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள விஷ்ணுபிரயாக் என்ற பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. சாலை முழுவதும் மண் சரிந்த நிலையில் அருகிலுள்ள அலக் நந்தா ஆற்றிலும் மண் சரிந்தது. இதனால் பத்ரிநாத் கோவிலுக்கு செல்லும் பாதை தடைபட்டுள்ளதால் பக்தர்கள் மேற்கொண்டு பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் பாதுகாப்பு மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் திரிவேந்திரசிங் ராவத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க