• Download mobile app
29 May 2026, FridayEdition - 3761
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகமே வந்தாலும் தமிழகம் தான் முதலிடம் பிடிக்கும் – கோவை மாணவி

May 19, 2017 tamilsamayam.com

தாய்லாந்து நாட்டில் நடந்த ஆசிய அளவிலான யோகா போட்டியில் கோவையை சேர்ந்த வைஷ்ணவி ஜூனியர் பிரிவில் இரு தங்கப்பதக்கம் வென்றதோடு, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார்.

கோவை தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருபவர் வைஷ்ணவி. இவர் தாய்லாந்தில் சமீபத்தில் நடந்த 13-15 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய அளவிலான யோகா போட்டியில் கலந்து கொண்டார். இதில் பல்வேறு யோகாவை நேர்த்தியாக செய்து இரண்டு தங்கப்பதங்கங்களை வென்றதோடு, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார். இந்தியா சார்பில் சில சிறுமிகளும், ஆசிய நாடுகளை சேர்ந்த சிறுமிகள் கலந்து கொண்ட போட்டியில் வைஷ்ணவி ஜொலித்துள்ளார்.

வைஷ்ணவி பேசியதாவது:

நான் இதுவரை 1000க்கும் மேற்பட்ட யோகா போட்டியில் கலந்து கொண்டுள்ளேன். 200க்கும் மேற்பட்ட தங்கப்பதக்கங்களை வென்றுள்ளேன். அதில் பெங்களூரு, கொச்சி, குஜராத ஆகிய இடங்களில் நடந்த தேசிய யோகா போட்டிகளும் அடங்கும். 150க்கும் மேற்பட்ட நாடுகளில் நடந்த யோகா போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளேன்.

யோகா மூலம் கின்னஸ் மற்றும் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதே என் லட்சியம். எனக்கு யோகா ராணி, யோகா நட்சத்திரம் உள்ளிட்ட பட்டங்களை வாங்கியுள்ளேன்.

யோகா மூலம் பெருமையை சேர்க்கும் வைஷ்ணவிக்கு இலவச கல்வி அளிப்பதோடு, அவரது அனைத்து முயற்சிக்கும் ஆதரவளிக்கும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க