• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வனப்பகுதிகளில் யானைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

May 17, 2017 தண்டோரா குழு

கோவை மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் யானைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இப்பணியில் 50-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பங்கேற்றுள்ளனர்.

கோவை வன கோட்டத்தில் காட்டுயானைகள் அதிகம் உள்ள மேட்டுப்பாளையம் ,காரமடை, சிறுமுகை,பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட வனச்சரகங்களில் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று முதல் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இன்று அதிகாலை முதலே வனத்துறை அதிகாரிகள் தலைமையில் இயற்கை ஆர்வலர்கள் என பல்வேறு குழுக்களாக பரிந்து 100-க்கும் மேற்பட்டோர் யானைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மூன்று பிரிவுகளாக கணக்கெடுக்கும் இப்பணியில் இன்று நேர் கோட்டில் யானைகளை பார்த்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாளை யானையின் சானம் வைத்து கணக்கெடுக்கும் பணி , நாளை மறுநாள் நீர் நிலைகளில் தண்ணீர் அருந்த வரும் யானைகளை கணகெடுக்கும் பணி நடைபெற உள்ளது.

இந்த கணக்கெடுப்பில் யானையின் இனப்பெருக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்தும் ஆண், பெண் மற்றும் குட்டி யானைகள் சதவீகிதம் எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்பதை அறிந்துகொள்ளும் வகையிலும் நடத்தப்படவுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க