• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல் நாளே 40 ஆயிரம் பேர் பயணம்

May 16, 2017 தண்டோரா குழு

சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுரங்கப்பாதை வழியாக இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான 7.63 கிலோ மீட்டர் தொலைவுள்ள அந்த வழித்தடத்தில் முதல் நாளன்றே அதில் 40 ஆயிரம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வரும் 21-ம் தேதிவரை மெட்ரோ ரயில் சேவை கட்டணத்தில் 40 சதவீதம் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுரங்க பாதை மெட்ரோ ரயிலில் பயணிக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோடை விடுமுறைக் காலம் என்பதால் குழந்தைகள், அதிக அளவு பயணித்து வருகின்றனர். இதனால் பயணிகளின் எண்ணிக்கை மேன் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க